காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கை : தமிழனுக்கு கிடைத்த தேசிய விருது!!

877


தமிழனுக்கு கிடைத்த தேசிய விருது



தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கையை தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கியுள்ளதற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.



முத்துவின் மனைவி அறுவை சிகிச்சைக்கு பின்னர் படுக்கபடுகையானதை அடுத்து அவரை மகிழ்விப்பதற்காகவும், காதல் மனைவியின் கஷ்டத்தை போக்குவதற்காகவும் தொலைதூர கட்டுப்பாட்டின் படி இயங்கும் கழிப்பறையுடன் கூடிய படுக்கை உருவாக்கியுள்ளார்.(ரிமோட் கண்ட்ரோல் டாய்லெட் பெட்)




படுக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் : ஒரு ஃப்ளஷ் டேங்க், மூடியுடன் கூடிய குழாய், செப்டிக் தொட்டிக்கு ஒரு இணைப்பு மற்றும் நடுவில் ஒரு இடைவெளி ஆகியவை உள்ளன. இதன் ரிமோட் கண்ட்ரோலில் மூன்று பொத்தான்கள் உள்ளன.


படுக்கையின் அடிதளத்தை திறக்கவும், கழிவறையின் மூடியை திறக்கவும் மற்றும் கழிவறையை ப்ளஷ் செய்யவும் இந்த மூன்று பொத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளிகளின் தனிஉரிமை மற்றும் அவர்களின் கண்ணித்தைய காப்பதற்காகவும் இதனை வடிவமைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

இவரின் இந்த கண்டுபிடிப்புக்காக , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து தேசிய விருது மற்றும் ரூ. 2 லட்சம் பரிசு தொகையுடன், முதல் படுக்கையின் தயாரிப்பு செலவான 35,000 ரூபாயையும் திரும்ப பெற்றுள்ளார். இதுவரை ஒரு படுக்கையை விற்பனை செய்துள்ளார். தற்போது, இந்தியா முழுவதும் இருந்து 350 க்கும் மேற்பட்ட ஓர்டர்கள் வந்துள்ளன என்று முத்து தெரிவித்துள்ளார்.