வவுனியா மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுப்பு!!

389


போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்



போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.



மேலதிக அரசாங்க அதிபரினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
‘போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.




ஜனாதிபதியின் நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவின் கீழ் போதைப் பொருளுக்கு எதிரான தேசிய தடுப்பு வேலைத்திட்டமானது மாகாணம் மாவட்டம் மற்றும் பிரதேச ரீதியாக நாடு பூராவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.