வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியப்பிரமாண நிகழ்வு!!

385


போதைக்கெதிரான சத்தியப்பிரமாண நிகழ்வு



வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியபிரமாண நிகழ்வு இன்று (06.04) இடம்பெற்றது.



போதைக்கு எதிரான ஜனாதிபதியின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சித்திரை புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய மைதானத்தில் இடம்பெற்றது.




வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை புதுவருட சத்தியபிரமானத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.


இந்நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.