வவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி!!

522

விற்பனைக் கண்காட்சி

புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி விற்பனை கண்காட்சி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.

புதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஒரேஇடத்தில் மலிவுவிலையில் பெற்றுக்கொள்ளும்படியாக சமுர்த்தி பயனாளர்களினால் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மரக்கறி, பழவகை, தானியவகைகள், ஆடை அணிகலன்கள், கைவினைப்பொருட்கள், பனை உற்பத்திப் பொருட்கள் போன்றன காட்சிப்படுத்தப்படுவதுடன் விற்பனை செய்யப்பட்டும் வருகிறன்து.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக உதவி பிரதசே செயலாளர் ச.பிரியதர்சினி, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார், வடமாகாண தொழில்திணைக்களத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.