வைரல் வீடியோவுக்காக இளைஞர்கள் செய்த செயல் : விபரீதமானதால் உயிரிழந்த நபர்!!

351


இளைஞர்கள் செய்த செயல்



வேடிக்கை வைரல் வீடியோ ஒன்றை உருவாக்குவதற்காக இரண்டு இளைஞர்கள் ஒருவரை ஆற்றில் பிடித்துத் தள்ள, நீச்சல் தெரியாத அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உக்ரைனில் நடைபெற்றுள்ளது.



உக்ரைனின் Dnipro நதியின் மேல் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் ஓரத்தில் நிற்கும் அந்த 48 வயது மனிதரை தாக்கும் அந்த இளைஞர்கள், வேடிக்கை வீடியோ ஒன்றிற்காக அதை படம் பிடித்துள்ளனர்.




பின்னர் திடீரென அவரை நதியில் பிடித்து அவர்கள் தள்ள, 12 அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்திருக்கிறார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் தத்தளித்த அவர் சற்று நேரத்தில் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்.


பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றாலும், விரைந்து செயல்பட்ட பொலிசார் அந்த இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் பொலிஸ் அதிகாரி ஒருவர், முன்பின் தெரியாத நபர் ஒருவரை ஆற்றில் பிடித்துத் தள்ளி அதை தங்கள் மொபைல் போனில் படம் பிடித்த, 1993 மற்றும் 1996இல் பிறந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.