வவுனியாவில் களைகட்டியுள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு!!

517

தமிழ் சிங்களப் புத்தாண்டு

வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களை கட்டியுள்ளது.

பிறக்க இருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் வாகன நெரிசல் காரணமாக பாதுகாப்புப் பொலிசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் வவுனியா பழைய பேரூந்து நிலையம், மணிக்கூட்டு கோபுர சந்தியடி, அங்காடி வியாபாரி நிலையம், புகையிரத வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் வழமை போன்றே காணப்படுகின்றது.

வவுனியாவில் நண்பகல் வேளையில் கடும் வெயில் வாட்டி எடுக்கின்றபோதும் பெருமளவிலான மக்கள் வவுனியா நகரில் புத்தாண்டு கொள்வனவில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.