வவுனியாவில் பொலிசாரிடம் வசமாக சிக்கிய இளைஞன்!!

425


சிக்கிய இளைஞன்



வவுனியா கற்குழி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர்.



குறித்தவிடயம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலிற்கமைய கற்குழி பகுதிக்கு சென்ற பொலிசார் 23 வயதான இளைஞர் ஒருவரிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.




இதன்போது அவரிடமிருந்து 512 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியிருந்தனர்.
கைதுசெய்யபட்டவர் இன்றயதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.