இலங்கையில் எட்டு இடங்களில் கோர குண்டு வெடிப்பு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு!!

315

கோர குண்டு வெடிப்பு

இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் காரணமாக இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர்.  நீர்கொழும்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துளள்ளார்.

கொழும்பு, கட்டான, மட்டக்களப்பு பகுதிகளிலுள்ள தேவாலயம், கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள், மற்றும் பல இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் 500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர சிகிச்சைகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 40 பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.