வவுனியா இளைஞன் குண்டுத்தாக்குதலில் பலி : இறுதிக் கிரிகைகள் வவுனியாவில்!!

1137

இறுதிக் கிரிகைகள்..

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் நான்காம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய முகமட் நிஸ்தார் நலீர் என்ற இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்த குறித்த இளைஞனின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் இன்று (22.04.2019) நடைபெற்றது.

இறுதிக்கிரியையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா கலந்து கொண்டு உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அரசாங்க இழப்பிடான ஒரு லட்சம் ரூபாவினை வழங்கி வைத்தனர்.

குறித்த இளைஞனின் இறுதிக்கிரியையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின், வவுனியா நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமி, பொலிஸார், கிராமசேவையாளர், இளைஞர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.