வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் சமயத்தலங்களுக்கு பாதுகாப்பு தொடர்கின்றது!!

789

பாதுகாப்பு தொடர்கின்றது

இலங்கையில் முக்கிய சில பகுதிகள் மற்றும் தேவாலயங்களில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினையடுத்து நேற்று மாலை வவுனியாவில் உள்ள சமயத்தலங்களுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாசல், ஆலயம் போன்ற பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. சந்தேகத்திடமான முறையில் சமயத்தளங்களிற்குள் பிரவேசிக்கும் நபர்களை பொலிஸார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

அத்துடன் நேற்றையதினம் பிரகடனப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு நிறைவடைந்தமையினையடுத்து வவுனியாவில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் நகரின் நிலைமை வழமை போன்றே காணப்படுகின்றது.