வவுனியாவில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் மேதின நிகழ்வுகள்!!

419

இலங்கை முழுவதும் மேதின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைதியான முறையில் மேதின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய புதியஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியுடன் இணைந்து வீதிபோக்குவரத்து தொழிலாளர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, புதியசிந்தனை பெண்கள் அமைப்பு, செம்மலர் சிறுவர் அமைப்பு ஆகியனவற்றின் ஏற்பாட்டில் பூந்தோட்டத்தில் குறித்த மேதினநிகழ்வு இ்ன்று காலை நடைபெற்றிருந்தது.

இதன்போது அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களிற்கு மெழுகுவர்தி ஏற்றி, மௌன அஞ்சலி நிகழ்தபட்டிருந்தது.

நிகழ்வில் புதியஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் நி.பிரதீபன், வீதிப்போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர் மகேந்திரன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் டொன்பொஸ்கோ, புதிய சிந்தனை பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பி.பிராசந்தி ஆகியோர் கலந்துகொண்டதுடன், தொழிலாளர் தின சிறப்புரைகளையும் நிகழ்த்தியிருந்தனர்.