இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு!!

516

இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினருக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கட் மற்றும் சர்வதேச கிரிக்கட் சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியன இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கைக் குழாம் பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.