வவுனியாவில் உயிரிழந்த நகரசபை ஊழியர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

629

வவுனியா நகரசபையின் கொல்களத்தில் கடமையின் போது உயிரிழந்த நான்கு சுகாதார தொழிலாளிகளுக்கும் நேற்று(02.05) அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா சகாயமாதாபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் நகரசபையின் கொல்களத்தின் கழிவுக் கிடங்கை சுத்தம் செய்தபோது விசவாயு தாக்கத்தினால்
சே.செல்வராசா, பி.சசிகுமார், சந்தனசாமி, வசந்தகுமார் ஆகிய சுகாதார தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஊழியர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி இவ் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆலயத்தின் பிரதான குருவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமி, ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் நி.பிரதீபன், ஸ்ரீடெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் கார்த்தி, அருட் சகோதரிகள், வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் சுஜன் உட்பட பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தியதுடன் தீபமேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.