மிஸ் சூப்பர் குலோப் இந்தியா – 2019 பட்டம் வென்ற சென்னைப் பெண்!!

530

கேரளாவில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான ‘மிஸ் சூப்பர் குலோப் இந்தியா’ போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அக்சரா ரெட்டி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா – 2019’ அழகி போட்டியானது கடந்த வாரம் கேரளாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 22 மாநிலங்களை சேர்ந்த 240 பேர் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி(24) என்பவர் கலந்து கொண்டு பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.

இதன்மூலம் வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெறும் ‘மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு-2019’ பட்டத்துக்கான போட்டியில், இந்தியாவின் சார்பில் அக்சரா ரெட்டி கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஏற்கனவே தென்னிந்திய அழகி பட்டத்தை வென்றிருந்த அக்சரா நேற்று சென்னை திரும்பியதும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு ‘மிஸ் சூப்பர் குலோப் இந்தியா -2019’ போட்டியில் பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை போன்ற ஒரு சக்திவாய்ந்த அரசியல் தலைவியை நான் பார்த்ததில்லை.

தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பது வருத்தமளிக்கிறது. மீ டூ வந்த பிறகு தான் பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் ரஜினி, அஜித், விஜய் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.