கேலி கிண்டலுக்கு ஆளான ப்ரியாங்கா சோப்ராவின் உடை!!

393

வருடந்தோறும், ஹாலிவுட் பிரபலங்கள் வித்தியாசமாக உடையணிந்து ஒப்பனை செய்து வரும் மெட்காலா என்னும் காஸ்ட்யூம் பார்ட்டி நியூயார்க்கில் நடைபெறும். இந்த வருடமும் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் வித்தியாசமான காஸ்ட்யூம், மிக மிக வித்தியாசமான மேக்கப்புடன் கணவர் நிக் ஜோனாஸுடன் கலந்துகொண்டார். இதனால் கடந்த இரண்டு வருடங்களைப் போலவே இந்த வருடமும் பிரியங்காவின் காஸ்ட்யூமை நெட்டிசன்ஸ் டிரோல் செய்தார்கள்.

இந்த நிலையில் மெட் காலாவுக்காக பிரியங்கா சோப்ராவுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்து கொடுத்த பிரபல டிசைனர் பிராண்டான ’டியோர்’ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பிரியங்கா சோப்ராவுக்கு தைத்த உடையைப் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், இந்த உடையை பிரியங்கா மெட் காலாவில் கலந்துகொள்வதற்கென்றே விசேஷமாகத் தயாரித்தோம். ஒயிட், பிங்க், லெமன் யெல்லோ போன்ற மென்மையான நிறங்களில், பறவைகளின் இறகுகளை ஒத்த ஒவ்வொரு டிசைன்களையும் வெள்ளி நூலால் கைகளாலேயே கோத்தோம்.

இந்த உடையைத் தயாரிப்பதற்கு எங்களுக்கு 1500 மணி நேரங்கள், அதாவது 62 நாள்கள் தேவைப்பட்டது என்று கூறியுள்ளனர்.