ஒரே பந்தில் ஹீரோவான மலிங்கா : 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி!!

424

சென்னை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகிதசர்மா தலைமையிலான மும்பை அணியும் நேருக்கு நேர் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கைரன் பொல்லார்டு 41 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணி சார்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளையும், ஷர்டுல் தாகூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்கார்கள் டூ பிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன் சிறப்பானதொரு துவக்கத்தை கொடுத்தனர். டூ பிளெஸ்ஸிஸ் 26 ரன்களில் வெளியேற, அடுத்த வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில், வந்த வேகத்திற்கு நடையை கட்டினார்.

ஆனால் நிலைத்து நின்று ஆடிய ஷேன் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்களை குவித்து ரன் அவுட்டனார். ஆட்டம் முதலே ரன்களை வாரி வழங்கிய மலிங்கா கடைசி ஒரு பதில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, சாமர்த்தியமாக வீசி ஷர்டுல் தாகூர் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி 4 முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.