வவுனியாவில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பாடசாலைகளில் கனிஷ்ட வகுப்புக்களும் ஆரம்பம்!!

659


கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து 2ம் தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதில் தாமதங்கள் ஏற்பட்டன. கடந்தவாரம் தரம் 6 முதல் உயர்தரம் வரை 2ம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று கனிஸ்ட பிரிவுகள் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பமாகின. வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.



இதேவேளை சிவில் பாதுகாப்பு பிரிவினர், பெற்றோர், பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் பாடசாலை பைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. எனினும் பாடசாலைகளில் இன்றைய தினமும் வருகை குறைவாகவே காணப்பட்டது.