நள்ளிரவில் மண்ணிலிருந்து தங்கத்தை எடுக்கும் கும்பல்… லட்சங்களில் வருமானம் : ஆச்சரிய தகவல்!!

713

ஆச்சரிய தகவல்

மும்பையில் ஜவேரி பகுதியில் இரவில் கீழே சிந்தும் தங்கங்கள், வடிகால் வழியாக வெளியேறும் தங்கத்துகள்களை கண்டுபிடிக்கும் வேலையை ஒரு கும்பல் செய்து வருவது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது ஜவேரி பஜார் பகுதி. இந்தப் பகுதி தான், இந்தியாவுக்குத் தேவையான 60 சதவிகிதம் தங்கத்தைத் தருகிறது. இங்கு 7000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளும், தங்கப் பட்டறைகளும் உள்ளன.

இங்கு ஒருநாள் வர்த்தகம் ஒரு கோடியை தாண்டுமாம். இந்த தங்கப் பட்டறைகளில் பணிபுரியும் நகை ஆசாரிகள், தங்களின் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லும்போது, அவர்களின் சட்டை, தலைமுடி ஆகியவற்றில் இருக்கும் தங்கத்துகள்கள், அவர்கள் வெளியில் வரும்போது கடையின் வாசலில் வெளியேறிவிடும்.

சிலர், வேலை முடிந்ததும் தங்களின் கை கால்களைச் சுத்தம்செய்கையிலும் தங்கத்துகள்கள் வடிகால் வழியாக வெளியேறுகிறது. அவற்றைக் கண்டுபிடிக்கும் வேலையைத் நடு இரவில் செய்கிறது இந்தக் கும்பல்.

இதற்காக கத்தி, பிரஷ், துடைப்பம் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இது குறித்து ஆரிப் (17) என்ற சிறுவன் கூறுகையில், முதலில், மண்ணில் இருக்கும் தங்கத்தைப் பிரிக்க, பாயும் நீரில் கழுவுவோம். தங்கத்தை கண்களால் பார்க்க முடிந்தாலும் அவற்றைக் கையில் எடுக்க முடியாது.

பிறகு, மண்ணில் உள்ள இரும்புத் துகள்களை காந்தத்தின் உதவியுடன் பிரிப்போம். இறுதியில் உள்ள கலவையுடன் பாதரசத்தைக் கலந்து சூடேற்றுவோம். அதன் மூலம் தங்கம் தனியாகப் பிரிந்துவிடும் மொத்தமாக ஒரு நாளுக்கு 200 முதல் 1500 ரூபாய் வரை கிடைக்கும். எங்களுக்கு அதிர்ஷ்ட நாளாக இருந்தால் லட்சங்களிலும் பணம் கிடைக்கும் என கூறியுள்ளார்.