முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது இராணுவ வீரரா? வெடிக்கும் சர்ச்சை!!

245

வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களின் போது இராணுவ சீருடையில் வந்த நபர் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையை இராணுவ அதிகாரி வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறித்த நபர் உண்மையில் இராணுவ வீரரா? அல்லது திட்டமிட்ட வகையில் வேறு நபர்கள் அந்த ஆடையில் வந்தார்களா என்பது குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ உடையில் துப்பாக்கியுடன் வேடிக்கை பார்க்கும் நபரின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் இராணுவ சிப்பாய் என உறுதி செய்யப்பட்டால் அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான காணொளிகள் இருப்பின் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் பாதுகாப்பு பிரிவிடம் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

-தமிழ்வின்-