கோர விபத்தில் மூவர் பலி!!

321


மூவர் பலி



கெக்கிராவை மடாடுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த சம்பவம் இன்று பிறபகல் இடம்பெற்றதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் ஒன்றும் எதிரே வந்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன் , குறித்த வேனில் பயணித்த குழுவினர் மாத்தளை – கவடயாமுன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.