வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் குகனின் 20 ஆவது நினைவு தினம்!!

459


20 ஆவது நினைவு தினம்



தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜா (குகனின்) 20வது நினைவு தினம் இன்று (15.05.2019) காலை வவுனியா வைரவப்புளிங்குளம் யங் ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.



தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோரோதாரலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்,




வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபைத் தலைவர் து. நடராஜசிங்கம் (ரவி) பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், கட்சியின் தோழர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் மெழுவர்த்தியும் ஏற்றினார்கள்.