வவுனியா பட்டக்காடு மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் தீவிரவாத செயற்பாட்டிற்கு எதிராக பிரார்த்தனை!!

487

தீவிரவாத செயற்பாட்டிற்கு எதிராக பிரார்த்தனை

நாட்டில் கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத செயற்பாட்டிற்கு எதிராகவும் நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்காக குரல்கொடுக்கும் அமைச்சர்களுடைய பாதுகாப்பை வேண்டி வவுனியா பட்டக்காடு பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் இன்று (17.05.2019) மாலை 4.30 மணியளவில் விசேட பிராத்தனை இடம்பெற்றது.

நாட்டில் ஒர் சமாதானம் ஏற்பட வேண்டும் குறிப்பாக தமிழ் , முஸ்ஸிம் , சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற ஒர் நோக்கத்திற்காகவும் இப் பிரார்த்தனை இடம்பெற்றிருந்தது.

பிரார்த்தனையின் போது பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்களது வேண்டுதலை கடவுளிடத்தில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசலின் தலைவர் எ.ஆர்.எம்.லரீப் தலமையில் இடம்பெற்ற இப் பிரார்த்தனையில் வவுனியா நகர பள்ளிவாசல் நிர்வாகிகள், பட்டானீச்சூர் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள், பட்டக்காடு ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள் என வவுனியாவிலுள்ள பெரும்பாலன பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் கிராமத்திலுள்ள பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.