பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்கிய பௌத்த, கிறிஸ்தவ மத குருக்கள்!!

250


பௌத்த, கிறிஸ்தவ மத குருக்கள்



மினுவாங்கொடை மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜ் பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்ற ஜும்மா தொழுகையின் போது பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேந்த மதகுருக்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தொடர்ந்து, அண்மை காலமாக நாட்டின் பல இடங்களிலும், வனமுறை தலைத்தூக்கியிருந்தது. இதன்போது இஸ்லாமியர்களின் கடைகள், நிறுவனங்கள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.



குறிப்பாக மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற இனவாத வன்முறை சம்பவத்தில் மினுவாங்கொடை மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜ் பள்ளிவாயில் கடுமையாக தாக்கப்பட்டு சேதங்களுக்குள்ளாக்கப்பட்டிருந்தது.




இந்நிலையிலேயே, குறித்த பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்ற ஜும்மா தொழுகையின் போது பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேந்த மதகுருக்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெளத்த விகாரை ஒன்றின் மதகுரு ஒருவரும் கிறிஸ்தவ குருக்கள் இருவரும் தொழுகை வேளையில் பள்ளிவாயலில் அமர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.