விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக் கூடு ஒன்று மீட்பு!!

248

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் மனித எலும்புக் கூடு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவ சங்கத்தினரின் காணியில் புதிய கட்டம் ஒன்றின் நிர்மாணத்திற்காக குழி தோண்டப்பட்டபோதே குறித்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த எலும்புக் கூட்டுடன் சயனற் குப்பி ஒன்றும், இரண்டு கைக்குண்டுகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.