வெசாக் கொண்டாட்டம்
வவுனியாவில் அமைதியான முறையில் வெசாக் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. வவுனியா நகரம் முழுவதும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொலிஸார், இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலத்திலிருந்து வவுனியா நகர் வரை கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
விகாரைகள், அரச அலுவலகங்கள், திணைக்களங்கள், வங்கிகள், நிறுவனங்கள் என்பவற்றுக்கு முன்னாலும் வெசாக் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.