விபத்தில் ஒருவர் பலி
கரந்தெனிய – எருவ்வல பாலத்தின் அருகாமையில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கரந்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து குறித்த கரந்தெனிய காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.