கால்வாயில் மூழ்கிய காரில் இளைஞனின் சடலம்!!

231

பொலிகஸ்ஹோவிட்ட பகுதியில் விருந்தகம் ஒன்று அருகில் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்த சிற்றூர்தியொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

29 வயதான குறித்த இளைஞர் தெஹிவளை பகுதியை சேர்ந்தவருடன், சில நாட்களுக்கு முன்னர் மேலும் சிலருடன் விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக குறித்த விருந்தகத்திற்கு சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த இளைஞர் மீண்டும் வீடு திரும்பாமை காரணமாக தாய் உள்ளிட்ட உறவினர்கள், காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.