வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை சாலையில் அஞ்சலி நிகழ்வு!!

750

கடந்த மாதம் 21.04.2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா இ.போ.ச சாலையில் இன்று (21.05.2019) காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மெழுவர்த்தி சுடரும் ஏற்றப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் இ.போ.ச வவுனியா சாலையின் முகாமையாளர், உப முகாமையாளர், கணக்காளர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், சாரதிகள், நடத்துனர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.