வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது இளைஞன் தாக்குதல்!!

2301

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று (24.05.2019) மாலை 6.30 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞன் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

வவுனியா புதிய பேரூந்து நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் கடமையில் ஈடுபடும் குறித்த முச்சக்கரவண்டியானது பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டானிச்சூர் பகுதியினை அண்மித்த சமயத்தில் முச்சக்கரவண்டியினை பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கில் பயணித்த இளைஞர் ஒருவர் முச்சக்கரவண்டி முன்பாக மோட்டார் சைக்கிலினை நிறுத்திவிட்டு முச்சக்கரவண்டியின் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்ட நிலையில் வவுனியா பொலிஸார் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.