வவுனியாவிற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் வருகை!!

716

மன்னார் மறைமாவட்ட ஆயர்

வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் பற்றிமாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதிப் பூசை நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.

இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற உறுதிப் பூசுதல் நிகழ்வில் ஆயரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் விசேட ஆரதானைகளும் இடம்பெற்றிருந்தது.

இதன் போது இப்பங்கை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உறுதி புசுதல் அருள்சாதனம் வழங்கி ஆய ரினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

பொலிஸாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓமந்தை பங்கைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.