17 வயது சிறுமியை உயிராக காதலித்த 64 வயது முதியவர் : இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

556

சிறுமியை காதலித்த 64 வயது முதியவர்

மலாவி நாட்டில் 64 வயது முதியவரை 17 வயது சிறுமி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மலாவியின் மிகின்ஜி மாகாணத்தை சேர்ந்தவர் தேக்ஸ்டர் பிரி (64). இவரும் 17 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதலுக்கு சிறுமியின் பெற்றோர் ஆதரவு கொடுத்ததோடு சட்ட பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக தங்கள் மகளுக்கு 18 வயதாகிவிட்டது, அதனால் அவர் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என பொய் கூறியுள்ளனர்.

இதையடுத்து முதியவர் பிரி, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சிறுமி கூறுகையில், நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன், மரணத்தை தவிர வேறு ஏதும் எங்களை பிரிக்க முடியாது என கூறியுள்ளார்.

சிறுமியும் அவர் பெற்றோரும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் முதியவரின் சொத்து மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு அவருடன் திருமணம் நடந்ததா என கேள்வி எழுந்துள்ளது.