கடும் வறட்சியால் 20லட்சம் பேரை பலி கொடுக்க இருக்கும் நாடு : ஐநாவின் அதிரடித் தகவல்!!

329


கடும் வறட்சி



வெயில் காலம் முடிவதற்குள் சோமாலியாவில் வறட்சியால் 20 லட்சம் மக்கள் பசியால் பலியாகப் போகிறார்கள் என ஐநா தெரிவித்துள்ளது.



ஆபிரிக்க நாாடுகளுள் ஒன்றான சோமாலியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. கடுமையான வறட்சி காரணமாக வெயில் காலம் முடியும் முன்பே பசியால் 20லட்சம் மக்கள் பலியாக கூடும் என்று ஐநாவின் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது.




கால்நடைகள் பயிர்கள் கூட அழிந்து வரும் சூழலில் மீட்புபணிக்கே சுமார் 70மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்கிறார் ஐநா துணை செயலாளர் மார்க்லோலாக்.


உணவு மற்றும் தண்ணீருக்காக மட்டும் சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா பகுதிகளுக்கு ஐநா சுமார் 45 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. பொருளாதார உதவிகள் கிடைக்கத் தாமதமானால் கூட மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் ஐநா அச்சம் தெரிவித்துள்ளது.