வவுனியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முஸ்ஸிம் பாடசாலைகள் ஆரம்பம்!!

823


முஸ்ஸிம் பாடசாலைகள் ஆரம்பம்



உயிர்த்த ஞாயி­றன்று தேவா­ல­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பலத்த பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



முஸ்ஸிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள இந் நிலையில் பாட­சா­லை­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் வவுனியாவிலுள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளினதும் பாது­காப்பு குறித்து கவ­னத்தில் கொள்ளப்பட்டுள்ளது.




இதற்­க­மை­வாக வவுனியாவிலுள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.


பொலிஸார், பெற்றோர், பாடசாலை சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் பாடசாலை பைகள் அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. வவுனியாவிலுள்ள ஏனைய தமிழ் சிங்கள பாடசாலைகளிலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.