முஸ்ஸிம் பாடசாலைகள் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முஸ்ஸிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள இந் நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வவுனியாவிலுள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளினதும் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக வவுனியாவிலுள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
பொலிஸார், பெற்றோர், பாடசாலை சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் பாடசாலை பைகள் அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. வவுனியாவிலுள்ள ஏனைய தமிழ் சிங்கள பாடசாலைகளிலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.