இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு : எவ்வளவு தெரியுமா?

936

எரிபொருளின் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, தற்போது புதிய விலையாக 138 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது. பெற்றோல் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.