வவுனியாவில் பாரவூர்தி குடைசாந்து விபத்து : ஏழு பேர் படுகாயம்!!

531

பாரவூர்தி குடைசாந்து விபத்து

வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று (11.06) காலை 8.30 மணியளவில் பாரவூர்தி குடைசாந்து விபத்துக்குள்ளானதில் எழுவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றிகொண்டு பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தி சாரதியின் வேகக் கட்டுப்பாட்டையிழந்து குடைசாந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பாரவூர்தியில் பயணித்த எழுவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மடுகந்தை பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.