விமானத்தில் ஏற முயன்ற போது வசமாக சிக்கிய இலங்கைத் தமிழர்!!

490

இந்தியாவின் பெங்களூரில் வைத்து 35 வயதான இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஹங்கேரிக்கான விமானத்தில் ஏற முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவர் இந்திய கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்துள்ளதுடன், தமிழரான இவர் இலங்கையின் மேல் மாகாணத்தை சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

2012ஆம் ஆண்டு மதுரைக்கு சென்ற அவர் அங்கேயே தங்கிவிட்டதாகவும், 2019இல் பெங்களூருக்கு சென்ற அவர் அங்கு வைத்தே இந்திய கடவுச்சீட்டை பெற்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.