வவுனியாவில் வறட்சி காரணமாக 40 குடும்பங்கள் பாதிப்பு!!

463


வறட்சி



வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர் வறட்சி காரணமாக 40 குடும்பங்களை சேர்ந்த சுமார் 109 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ பிரிவின் இன்றைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வவுனியா மாவட்டத்தில நிலவும் கடுமையான வறட்சி காரணமாக வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் இதுவரை 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,768 குடும்பங்களை சேர்ந்த 40,098 பேரும், மன்னார் மாவட்டத்தில் 16,243 குடும்பங்களை சேர்ந்த 56,324 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 4771 குடும்பங்களை சேர்ந்த 16,636 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.