முல்லைத்தீவில் தமிழன் குண்டு மீட்பு!!

536


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பலவன் பொக்கணை பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.



அம்பலவன் பொக்கணை பகுதியில் நேற்யை தினம் காணியினை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது நிலத்தில் புதைந்த நிலையில் இரண்டு தமிழன் குண்டுகள் காணப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் தமிழன் குண்டினை அடையாளப்படுத்தி நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அதனை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.