வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கால்வாயில் பாய்ந்த கார்!!

626


கால்வாயில் பாய்ந்த கார்



காலி தெற்கு கடற்படை முகாமிற்கு அருகில் பெண்ணொருவரால் செலுத்தப்பட்ட கார் ஒன்று பாலத்தில் மோதி கால்வாயில் வீழ்ந்துள்ளது. காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்து ஏற்படும் போது குறித்த பெண்ணும், அவரது தந்தை மாத்திரமே காரில் இருந்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் காருக்கும், பாலத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்து சம்பவம் தொடர்பில் காலி போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.