திருமண யோசனையை ஏற்க மறுத்த பெண் கொலை!!

279


பெண் கொலை



சூரியவெவ – பெத்தேவெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.



28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு 65 வயதுடைய நபரொருவர் குறித்த பெண்ணை பல தடவைகளை தொந்தரவு செய்து வந்துள்ளார்.




இந்நிலையில், நேற்று பெண்ணின் வீட்டுக்கு வந்து மீண்டும் திருமண யோசனையை முன்வைத்துள்ளார். இதற்கு பெண் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.


இதன்போது , பெண் குறித்த நபரின் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோபமுற்ற மேற்படி நபர் நேற்று பிற்பகல் குறித்த பெண் வீதியில் சென்றுக் கொண்டிருந்த போது உந்துருளியொன்றில் வந்து அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்காக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை குறித்த பெண்ணின் உறவினர்கள் சந்தேகநபரின் வீட்டை சேதப்படுத்தியுள்ளனர்.