வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா!!

801


திறன் வகுப்பறை திறப்பு விழா



வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இன்று (13.06) காலை 10 மணியளவில் திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் ச.பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.



வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.




சிறப்பு விருந்தினர்களாக எஸ்.மரியநாயகம் (வவுனியா தெற்கு கல்வி வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர்) ம.ஜெகதீஸ்வரன் (பிரதி அதிபர் வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம், இணைப்பாளர் ரட்ணம் பவுண்டேசன்) துஷார (பண்டாரிகுளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி), மா.அதிர்ஷ்ட செல்வம் (வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்),


கௌரவ விருந்தினர்களாக திருமதி. உ.சூரியச்செல்வன் (பாடசாலை வசதிப்படுத்துனர் ஆசிரிய ஆலோசகர் ஆங்கிலம்), திருமதி.செ.விஜயகாந்தன் (ஆசிரிய ஆலோசகர் ஆரம்பக் கல்வி), சமுர்த்தி உத்தியோகத்தர், பெற்றோர்கள் மாணவர்கள். ஆசிரியர்கள், எனப்பலரும் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் சின்னம் சூட்டி வைக்கப்பட்டது.