கிழக்கு பல்கலையில் பகிடிவதை : நான்கு மாணவர்கள் படுகாயம்!!

1179

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையின் போது நான்கு மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால் நான்கு மாணவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் 4 மாணவர்கள் மீது சம்பவதினமான நேற்று இரவு 2 ஆம் ஆண்டில் கல்விபயின்று வரும் மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டு அவர்கள் மீது தாக்குல் நடாத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.