வவுனியாவில் குளத்தில் புதையுண்ட காட்டு யானையை மீட்க நடவடிக்கை!!

450

வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியிலுள்ள குளத்தில் யானை ஒன்று நேற்று முதல் புதையுண்ட நிலையில் காணப்படுவதாக ஓமந்தை பொலிசார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இன்று அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து யானையை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை குளத்தின் நடுவே புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது. தற்போதைய வரட்சி நிலை காரணமாக குளத்தின் தண்ணீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. யானைக்கு காலில் காயங்கள் ஏதும் ஏற்பட்டிருக்கலாம் அதன் காரணமாகவே யானையினால் நகர முடியவில்லை என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகர்கள் இணைந்து யானையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.