சிறுமியின் படுக்கையறைக்குள் மறைந்திருந்த நபர் : வெளியான உண்மைகள்!!

704

படுக்கையறைக்குள் மறைந்திருந்த நபர்

அமெரிக்காவின் Mt. Juliet பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் ஒரு இளைஞர் நுழைவதைக் கண்ட அயலகத்தார் ஒருவர் பொலிசாருக்கு தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் அந்த வீட்டின் கூரைக்கடியில் உள்ள பகுதியில் அவர் ஒளிந்திருப்பதைக் கண்டு அவரைக் கைது செய்தனர்.

Matthew Casto (18) என்னும் அந்த நபர், சற்று முன்னர்தான், அதே வீட்டிற்குள் முன்னொரு முறை அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். அந்த வீட்டில் வசிக்கும் ஒரு 14 வயது சிறுமியின் படுக்கையறைக்கு மேல் உள்ள கூரைக்கடியில் அவரை பொலிசார் கைது செய்தார்கள்.

கைது செய்யும்போது அவர் முரண்டு பிடித்ததால் டேஸர் என்னும் கருவியை பயன்படுத்தித்தான் அவரை கைது செய்ய முடிந்தது. ஏற்கனவே ஒரு முறை அதே வீட்டிற்குள் நுழைந்ததற்காக Casto கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதோடு அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தார். விசாரணையில், சிறிது காலமாகவே அந்த வீட்டின் கூரைக்கு கீழ் Casto மறைந்து வாழ்ந்ததும், அந்த சிறுமி தூங்கியதும் அவளது அறையிலுள்ள துணி வைக்கும் ஷெல்ஃப் வழியாக அவர் வெளியே வருவதுண்டு என்பதும் தெரியவந்துள்ளது.

இரண்டாவது முறையாக Casto அதே பெண்ணின் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால்,அரசாணை ஒன்றை மீறியதற்காகவும், அத்து மீறி நுழைந்ததற்காகவும், சட்ட விரோதமாக ஒரு வீட்டுக்குள் நுழைந்ததற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிகிறது.