புகையிரதத்தில் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி!!

438

தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி

கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மூன்று பேர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த மூன்று பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.