வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய!!

745

சபாநாயகர் கரு ஜயசூரிய

வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள டீ.யு.லீ நினைவு நூலகம் மற்றும் மஹாகருணா பள்ளியினை இன்று (15.06.2019) காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

வவுனியாவிற்கு இன்று காலை 9 மணியளவில் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய ஏ9 வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ போதிதக்சிணாராமய பௌத்த விகாரைக்கு சென்று விகாரதிபதி சியம்பலாகஸ்வெல விமல சாரநாயக்க தேரரிடம் ஆசிகளை பெற்றதுடன் வவுனியாவில் தற்போதைய நிலமைகள் பற்றியும் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் 10.30 மணியளவில் ஈரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள டீ.யு.லீ நினைவு நூலகம் மற்றும் மஹாகருணா பள்ளியினை திறந்து வைத்தார்.

இக் கட்டிட திறப்பு விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச மற்றும் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த வெளிநாட்டவர்கள், பௌத்த விகாரதிபதிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.