வவுனியா நகர் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு அலங்கரிப்படுகின்றது!!

355

பொசன் போயா

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா மணிக்கூட்டு சந்தியடியிலிருந்து ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ முகாம் வரையிலான பகுதி பௌத்த கொடியினால் அலங்கரிக்கும் பணியில் இரானுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக ஏ9 வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ போதி தக்சிணாராமய பௌத்த விகாரையினுள் கொட்டகைகள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் விகாரைக்கு முன்பாக வெசாக் தோரணங்கள் அமைக்கும் பணியிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

நாளையதினம் இரவு வன்னி இரானுவத்தினரின் ஒழுங்ககைப்பில் ஸ்ரீ போதி தக்சிணாராமய பௌத்த விகாரையில் விசேட புஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.