13 வயது சிறுமியின் வயிற்றை சோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

279

மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 28 வயது மனைவியுடன் தமிழகத்தின் திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லி கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த தொழிலாளியின் மனைவிக்கு குழந்தை பிறந்ததால், குழந்தையை கவனித்துக்கொள்ள, அந்த பெண்ணின் 13 வயது தங்கையை பீகாரில் இருந்து திருப்பூருக்கு வரவழைத்துள்ளார். அதன் பின் திருப்பூர் வந்த அந்த சிறுமி, தனது அக்காளுடன் தங்கி குழந்தையை கவனித்து வந்தார்.

அப்போது அவர்களின் வீட்டின் அருகே வசித்து வந்த அஜித் கர்‌ஷல் என்ற 26 வயது இளைஞன் சிறுமியிடம் அடிக்கடி பேசி, பழக்கத்தை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளான்.

இதையடுத்து சொந்த ஊருக்கு சென்ற அந்த இளைஞன் மீண்டும் திருப்பூருக்கு திரும்பவே இல்லை. இதற்கிடையில் சிறுமியின் வயிறு திடீரென்று பெரிதாகிக் கொண்ட சென்றதால், அந்த சிறுமியின் அக்கா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூற, இதைக் கேட்டு அக்கா அதிர்ச்சியடைந்தார்.அதன் பின் சிறுமிடம் முழுமையாக விசாரித்த போது, அருகிலிருந்த வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் கர்ப்பமானதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதால், பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கர்ப்பமாக இருந்த சிறுமிக்கு நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.