வவுனியாவில் வறட்சி காரணமாக வற்றிப் போகும் குளங்கள் : மீன்கள் இறப்பு!!

379

வற்றிப் போகும் குளங்கள்

வவுனியாவில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் வறட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ் வரட்சி நிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றன.

குறிப்பாக, புதுக்குளம், மூனாமடுக் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவிலான நீர் பெறப்பட்டமையாலும், வெப்பமான வறட்சிக் காலநிலையாலும் நீர் வற்றியுள்ளது.

இதனால் அப்பகுதிக் குளத்தில் பெருந்தொகையான மீன்கள் இறந்து வருகின்றன. அத்துடன், கால்நடைகளும் நீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.